தமிழ்நாட்டுச் செய்தி
மதுரையில் ராமர் கோவிலை தகர்க்க சதி
[ செவ்வாய்க்கிழமை, 01 மே 2012, 06:21.20 AM GMT +05:30 ]
தமிழ்நாடு மதுரை அண்ணா நகரில் இன்று காலை ராமர் கோவில் அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதிகாலை நேரம் என்பதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

மதுரையில் தற்போது சித்திரைத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள் மதுரையில் குவிந்துள்ளனர். நாளை மதுரை மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை அண்ணா நகரில் உள்ள ராமர் கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளில் குண்டு ஒன்று வெடித்து மதுரை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து மதுரை உதவி கொமிஷனர் வெள்ளத்துரை பொலிஸாருக்கு குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வருகிற 10ம் திகதி மதுரையில் பாஜகவின் தேசிய மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, நரேந்திர மோடி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி ஆகியோர் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் இக்குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளமை மதுரையில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கணவர் கொலை வழக்கில் சாட்சி சொன்ன மனைவி கழுத்தறுத்து படுகொலை
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:53.34 AM ]
கரூர் அருகே உள்ள வெங்கமேடு வி.வி.ஜி. நகர் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 60). அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் வெட்டியானாக வேலை பார்த்து வந்தார். [மேலும்]
பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 02:28.22 AM ] []
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இரு பொலிசார்கள் திடீரென மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. [மேலும்]
சுபாஷ் சந்திர போஸின் அஸ்தி எங்கே? உடனடியாக பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:44.57 AM ]
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்]
பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்து பார்வையற்ற மாணவி சாதனை
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:35.33 AM ]
மத்திய பிரதேசத்தில் பிளஸ் 2 தேர்வில் கண் பார்வையற்ற மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். [மேலும்]
காந்தி தாத்தா ரத்தம் ஏலமா? என் ரத்தம் கொதிக்கிறது: கொள்ளுப்பேரன் வேதனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:39.26 AM ]
மகாத்மா காந்தியின் ரத்தம் தோய்ந்த பொருட்கள் ஏலம் விடப்படுவதை தடுக்க முடியவில்லையே என அவரது கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். [மேலும்]