ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி, வேட்பாளர்களான பிரணாப்பும் சங்மாவும் போட்டியிட்டு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் துணை ஜனாதிபதி தேர்தல் குறித்த சூடான தகவல்கள் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதுள்ள நிலவரத்தின்படி, ஓகஸ்டு 7, 8 திகதிகளில் துணை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறலாம் என்று கூறப்படுகின்றது.
தற்போது நாட்டின் துணை ஜனாதிபதியாக ஹமீது அன்சாரி உள்ளார். இவரையே மீண்டும் துணை ஜனாதிபதியாக்க காங்கிரஸ் வட்டாரங்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இம்மாதம் 30ம் திகதி தொடங்கி ஓகஸ்டு மாதம் 30ம் திகதி வரை நடைபெறலாம் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. |