நேற்று மாலை ஐந்தரை மணியளவில் திருப்பதி சென்ற அவர், 6 மணி அளவில் மலைக்கு சென்றார். அங்குள்ள பத்மாவதி மகாலில் இரவு தங்கிய ராஜபக்ச, அதிகாலை 3 மணியளவில் கோயிலுக்கு சென்று, சுப்ரபாத சாமி தரிசனம் செய்தார்.
ராஜபக்சவுடன் அவரது மனைவியும் கோயிலுக்கு சென்றார். சாமி தரிசனம் முடிந்து, 4 மணியளவில் ராஜபக்சே வெளியே வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயிலில் தமக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக கூறினார்.

|