இந்தியச் செய்தி
நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 04:56.46 AM GMT +05:30 ]
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் கைதான அப்சல் குரு இன்று தூக்கிலிடப்பட்டார்.

இன்று காலை 8.00 மணிக்கு அவருக்கு டெல்லியில் உள்ள திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.

முன்னதாக, தூக்குத் தண்டனை கைதி அப்சல் குருவில் கருணை மனுவை நிராகரித்து உத்தரவிட்டார் ஜனாதிபதி பிரணப் முகர்ஜி.

ஜனவரி இறுதியில் கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவலை மத்திய அரசு இன்று வெளியிட்டது.

நாடாளுமன்றத்தில் தாக்குதல் சம்பவம் நடந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த சம்பவத்தின் 11 ஆவது ஆண்டுதினம், கடந்த டிசம்பர் மாதம் 13ம் திகதி அனுசரிக்கப்பட்டது.

கடந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13ம் திகதி நாடாளுமன்றத்திற்குள் புகுந்த 5 தீவிரவாதிகள், சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதில், டெல்லி பொலிஸ் அதிகாரிகள் 5 பேர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.தாக்குதல் நடத்திய 5 பேரும் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நடந்த ஓராண்டுக்கு பின்னர், இது தொடர்பாக, அப்சல் குரு உள்ளிட்ட 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

விசாரணைக்கு பின் அப்சல் குரு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.

அப்சல் குருவின் பின்னணி நாடாளுமன்ற தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர். மருத்துவப் படிப்பில் முதல் ஆண்டை முடித்த நிலையில், ஐஏஎஸ் தேர்வுக்கு தன்னை தயார் படுத்தி வந்தபோது, ஜம்மு காஷ்மீர் மாநில விடுதலை முன்னணியில் சேர்ந்து தீவிரவாத பயிற்சி பெற்றதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து காஷ்மீருக்கு திரும்பிய அவர், எல்லை பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தார்.

பின்னர், அவர் பிறந்த ஊரான சோப்பூரில், தொழில் தொடங்கி நடத்தி வந்தபோது அனந்தநாக் பகுதியை சேர்ந்த தாரிக் என்ற தீவிரவாதியுடன் தொடர்ப்பு ஏற்படுத்திக்கொண்ட அப்சல் குரு, மீண்டும் தீவிரவாத அமைப்பில் சேர்ந்தார். அப்போது காசியாபாத் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களை தாக்க இந்த தீவிரவாதிகள் திட்டமிட்டனர். இந்த தாக்குதல் திட்டங்களில் ஈடுப்படும் தீவிரவாதிகள் பாதுகாப்பாக தங்க உதவியளித்து வந்தார்.

கடந்த 2001ம் ஆண்டு நடைபற்ற நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுப்பட்ட தீவிரவாதிகளுக்கு அப்சல் குரு அடைக்கலம் அளித்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. இதனால் அவர் மீது நாட்டுக்கு எதிராக போர் புரிந்தாக குற்றம்சாட்டப்பட்டது.

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி முகமது அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீரில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித செயல்களை தடுக்க மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஊரடங்கு உத்தரவால் ஸ்ரீநகர் உள்ளிட்ட மாநிலத்தின் பல இடங்களிலும் முள்வேலிகள் போடப்பட்டுள்ளன, போக்குவரத்தும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருக்கிறது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பை அதிகரித்துள்ள மாநில அரசு, பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு : சீன பிரதமர்

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்..!

கால் இல்லாத நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த வீராங்கனை

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.300 உயர்ந்தது

டெல்லி மாணவி பலாத்கார வழக்கு: குற்றவாளிகளிடம் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி மறுப்பு

காதல் திருமணம் செய்த தங்கையை கொன்றது ஏன்? அண்ணன் பரபரப்பு வாக்குமூலம்

கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையில் ஜெயலலிதா

தமிழ்நாட்டில் 2000 போலி மருத்துவர்கள்: அதிர்ச்சி தகவல்

காதலித்து ஏமாற்றியதாக காதலனை உதைத்து பொலிஸில் ஒப்படைத்த பெண்..!

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் ஆயுள் தண்டனை கைதியான 80 வயதானவர் கோர்ட்டில் சரண்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மார்பக புற்று நோயை அறிந்து கொள்ளும் அதிநவீன கருவி அறிமுகம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 08:13.34 AM ]
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை துல்லியமாக கண்டுபிடிக்கும் அதிநவீன "அமுலெட்" கருவி இந்தியாவிலேயே முதன் முதலாக டெல்லியில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. [மேலும்]
ஸ்ரீசாந்தை சூதாட்டத்தில் சிக்க வைத்த டிராவிட்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:51.24 AM ]
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 பேர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. [மேலும்]
டாக்டருடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால் மனைவி வெட்டிக் கொலை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:45.35 AM ]
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 40), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (34). [மேலும்]
ஸ்ரீசாந்துடன் ஹோட்டலில் தங்கியிருந்த மராத்திய நடிகை யார்?
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:56.35 AM ]
ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்ட போது, அவருடன் இருந்த மராத்திய நடிகையிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். [மேலும்]
காதலனை கரம்பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:45.19 AM ]
காதல் திருமணம் செய்த சென்னை பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]