இந்தியச் செய்தி
கற்பழிப்புக்கெதிரான சட்டத்திற்கு மருத்துவ மாணவியின் பெயர்
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 12:01.31 PM GMT +05:30 ]
மத்திய அரசு கொண்டுவர தீர்மானித்துள்ள கற்பழிப்புக்கெதிரான சட்ட திருத்தத்திற்கு டெல்லி மாணவியின் பெயரை வைக்க அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் கடந்த டிசம்பர் 16ம் திகதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி, 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட இந்த சோகம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவிக்கு நீதி கேட்டு இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் நாடுகளில் போராட்டங்கள் நடந்தன.

இதையடுத்து கற்பழிப்பு தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவிற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பரிந்துரைகள் வந்த வண்ணம் உள்ளன.

சமீபத்தில் நாட்டிலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கடிதம் எழுதியிருந்தார்.

அதில், கற்பழிப்புக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்குவது குறித்த கருத்துக்களை கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த பா.ஜ.க, கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என கூறியிருந்தது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருந்த அறிக்கையில், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மற்றும் ரசாயன முறையிலான ஆண்மை நீக்கம் போன்ற தண்டனைகள் வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

கற்பழிப்புக்கு எதிரான சட்டத்திற்கு உயிரிழந்த டெல்லி மாணவியின் பெயரை வைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சசிதரூர் தனது டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.

சசிதரூரின் இந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தபோதும், தற்போது மாணவியின் பெற்றோர் புதிய சட்டத்திற்கு தங்களது மகளின் பெயரை வைக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மாணவியின் தந்தை மற்றும் சகோதரர், கற்பழிப்புக்கு எதிரான சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டு அதற்கு மாணவியின் பெயரை வைப்பதற்கு தங்களுக்கு எவ்வித ஆட்சேபணை இல்லை என்றும், அது இறந்த மாணவிக்கு பெருமை தரும் செயல் என தெரிவித்தனர்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

தாலி கட்டும் தருணதில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

கள்ளக் காதலை கணவன் கண்டித்ததால் மனைவி ஆசிட் குடித்து தற்கொலை

பாகிஸ்தான் நோயாளிக்கு இதயம் கொடுத்து காப்பாற்றிய இந்தியா

சுகாதாரத் துறையில் இணைந்து செயல்பட இந்தியா-சீனா முடிவு

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக 9 தரகர்கள் கைது

கணவர் கொலை வழக்கில் சாட்சி சொன்ன மனைவி கழுத்தறுத்து படுகொலை

மனைவி மீது சந்தேகப்பட்டு 3 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்

பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு

பொருளாதாரத்தில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது: பிரதமர்

பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு வயது வரம்பு: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
காந்தி தாத்தா ரத்தம் ஏலமா? என் ரத்தம் கொதிக்கிறது: கொள்ளுப்பேரன் வேதனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:39.26 AM ]
மகாத்மா காந்தியின் ரத்தம் தோய்ந்த பொருட்கள் ஏலம் விடப்படுவதை தடுக்க முடியவில்லையே என அவரது கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். [மேலும்]
இந்தியாவிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தில் பாகிஸ்தான்
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:35.31 AM ]
கடும் மின் தட்டுப்பாடால் அவதிப்பட்டு வரும் பாகிஸ்தான், இந்தியாவிடமிருந்து 1000 மெகா வாட் மின்சாரம் வாங்கும் திட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. [மேலும்]
சூதாட்ட தலைவன் பிரசாந்துக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:59.14 AM ]
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் சிக்கினர். [மேலும்]
எந்த தப்பும் செய்யவில்லை-நான் நிரபராதி: ஸ்ரீசாந்த்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:24.26 AM ]
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் உட்பட 18 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
7 வயது சிறுமியை கற்பழித்து கொடூரமாக கொன்ற உடன்பிறவா அண்ணன்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:16.51 AM ]
மத்திய பிரதேசத்தில் 7வது சிறுமியை அவரது உடன்பிறவா அண்ணன் கடத்திச் சென்று, கற்பழித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]