இந்தியச் செய்தி
பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த இந்திய அதிகாரி கைது
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 05:55.07 AM GMT +05:30 ]
இந்திய வான் படை போர் ஒத்திகை குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவாளி ஒருவனுக்கு வழங்கியதாக உள்துறை அமைச்சக அதிகாரி கைது செய்யப்பட்டார்.

இந்திய வான் படை சார்பில், குண்டு வீசிதாக்குதல் உள்ளிட்ட போர் ஒத்திகை நிகழ்ச்சி கடந்த பெப்ரவரி மாதம் 22ம் திகதி, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன்சிங், ஜனாபதி பிரணாப் முகர்ஜி, இராணுவ அமைச்சர் அந்தோணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ராஜஸ்தானின் ஜெய்சல்மாரில் சந்தேகத்தின் பேரில் ஒருவனை, புலனாய்வுப்பிரிவு பொலிசார் பெப்ரவரி 25ம் திகதி கைது செய்து விசாரித்தனர். அவனது பெயர் சுமர்கான் (வயது 34) எனவும், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.உளவாளி என்பதும் தெரிய வந்தது.

அவன் கொடுத்த தகவலின்பேரில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஊழியர் சுரேந்திரா என்பவரிடம், போர் ஒத்திகை தொடர்பான ரகசிய ஆவணங்களை வாங்கியதாகவும் கூறினான்.

இது குறித்து புலனாய்வுத்துறையின் ராஜஸ்தான் பிரிவு இயக்குனர் ஜெனரல் தல்பாத் சிங் திங்கார் கூறுகையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் 4-வது கிரேடு அலுவலராக பணியாற்றி வந்த, ஜெய்சல்மார் நகரைச் சேர்ந்த சுரேந்திரா என்பவர் மீது கடந்த சில நாட்களாக சந்தேகம் ஏற்பட்டது.

அவரது மின்னஞ்சல்கள், போன் உரையாடல்களை கண்காணித்து வந்த நிலையில் அவர்தான் போர் ஒத்திகை அலுவலக ரகசியங்களை, பாக். உளவாளி சுமர்கானிடம் அளித்துள்ளார். சுரேந்திரா மீது அலுவலக ரகசியங்களை கசியவிட்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தோம்.

சுமர்கான், சுரேந்திரா ஆகிய இருவரும் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்றார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

பேச்சுத்திறனற்ற மாணவிகளுக்கு பாலியல் சித்திரவதை : பள்ளி நிர்வாகி கைது..!

போலீசார் சித்ரவதைக்கு கைதி பலி : 4 போலீசார் சஸ்பெண்ட்

பிரதமரை மாற்றுவது பற்றி யாரும் நினைக்க வேண்டாம் : காங்கிரஸ் திட்டவட்டம்

மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை

சூதாட்டத்திற்காக ஸ்ரீசாந்த் பிளாக்மெயில் செய்யப்பட்டாரா..!

ஐ.பி.எல்.சூதாட்ட தரகர்களின் தலைவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

மேட்டுப்பாளையம் கார் விபத்தில் மூவர் பலி..!

தண்டையார் பேட்டையில் வாலிபர் வெட்டிப் படுகொலை

கர்நாடகாவில் நடிகர் அம்பரீஷ், நடிகை உமாஸ்ரீ உட்பட 28 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு! 20 லிட்டர் தண்ணீர் ரூ.200: மக்கள் அவதி

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இறந்து போன மனைவிக்காக குட்டி தாஜ்மஹாலை கட்டிய கணவர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:48.19 AM ]
உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் தனது மனைவியின் நினைவில் தாஜ்மகாலைப் போன்றே ஒரு குட்டி தாஜ்மகாலை கட்டியுள்ளார். [மேலும்]
அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவி கற்பழித்துக் கொலை: இளைஞருக்கு 45 வருடம் சிறை
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:29.01 AM ]
அவுஸ்திரேலியாவில் இந்தியாவை சேர்ந்த 24 வயதுடைய மாணவியொருவர் கற்பழிக்கபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 45 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்தின் புலம்பல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:02.35 AM ]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீரர் ஸ்ரீசாந்த். சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது இவரது வாடிக்கையாகும். [மேலும்]
சீனாவை கண்காணிக்க புதிய விமானப்படை தளத்தை அமைக்கிறது இந்தியா
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 04:38.01 AM ]
இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. [மேலும்]
மதுரையில் குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 03:52.18 AM ]
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதிக்கருகில் உள்ள குப்பைத் தொட்டியில் குண்டு வெடித்ததில் மூன்று பேர் படுகாயமடைந்ததுடன், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]