தமிழ்நாட்டுச் செய்தி
சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ,நொடுமாறன் உட்பட 500 பேர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 02:47.09 AM GMT +05:30 ]
சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற பழ. நெடுமாறன், வைகோ உள்ளிட்ட 500 பேர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும், இலங்கை இறுதிப் போரின்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை இராணுவம் மீதும், அதிபர் மகிந்த ராஜபக்‌ஷ மீதும் பொது விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிருத்தி தமிழ்நாட்டில் சென்னையிலுள்ள நுங்கம்பாக்கத்தில் இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழர் அமைப்புகள் அறிவித்திருந்தன.

அதன்படி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உட்பட 500ற்கும் அதிகமானோர் டேங்க்ரோடு பகுதியில் திரண்டனர்.

இலங்கை அரசு, ராஜபஷாவுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டதோடு தொண்டர்களில் சிலர் ராஜபக்‌ஷாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது பேசிய வைகோ, ஈழத் தமிழர்களை துன்புறுத்தி படுகொலை செய்த இலங்கை அரசின் தூதரகம் தமிழகத்தில் இருக்கக் கூடாது. இலங்கை துணைத் தூதரகத்தை அகற்றாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்றார்.

பழ. நெடுமாறன் பேசும்போது, இந்தப் போராட்டம் உலகத் தமிழர்களின் உணவுர்களை வெளிப்படுத்துகிறது என்றார்.

அதனைத் தொடர்ந்து இலங்கைத் தூதரகம் நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற அவர்களை பொலிசார் தடுத்து நிறுத்தினர். அதனையும் மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பழ. நெடுமாறன், வைகோ, வேல்முருகன் உள்பட சுமார் 500 பேரை  பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை நாடகம் புரிந்த நபர் கைது..!

எதிர்க்கட்சியே பாராளுமன்ற முடக்கத்திற்கு காரணம் : சோனியா காந்தி குற்றச்சாட்டு

உலகின் அதிவேக ஏவுகணை சோதனை வெற்றி

அரசியலில் குதிக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா

காந்தி தாத்தா ரத்தம் ஏலமா? என் ரத்தம் கொதிக்கிறது: கொள்ளுப்பேரன் வேதனை

இந்தியாவிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தில் பாகிஸ்தான்

சூதாட்ட தலைவன் பிரசாந்துக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு

அடுத்த பிரதமர் நரேந்திர மோடி: 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் கருத்து கணிப்பு

நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் ஐவர் சுட்டுக்கொலை

எந்த தப்பும் செய்யவில்லை-நான் நிரபராதி: ஸ்ரீசாந்த்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
காதல் திருமணம் செய்த தங்கையை கொன்றது ஏன்? அண்ணன் பரபரப்பு வாக்குமூலம்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:26.03 AM ]
காதல் திருமணம் செய்து கொண்ட தங்கையை கொன்றது ஏன் என பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார் அப்பெண்ணின் அண்ணன். [மேலும்]
தமிழ்நாட்டில் 2000 போலி மருத்துவர்கள்: அதிர்ச்சி தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 05:13.45 AM ]
தமிழ்நாட்டில் இரண்டாயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது இந்திய மருத்துவர்கள் சங்கம். [மேலும்]
இன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:53.47 AM ]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினமான இன்று தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. [மேலும்]
3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:13.35 AM ]
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா அம்மயப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இஸ்மாயில், லாரி டிரைவர். [மேலும்]
மார்பக புற்று நோயை அறிந்து கொள்ளும் அதிநவீன கருவி அறிமுகம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 08:13.34 AM ]
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை துல்லியமாக கண்டுபிடிக்கும் அதிநவீன "அமுலெட்" கருவி இந்தியாவிலேயே முதன் முதலாக டெல்லியில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. [மேலும்]