இந்தியச் செய்தி
சர்வதேச பெண்கள் தினத்தில் மறைந்த டெல்லி மாணவிக்கு அமெரிக்க வீரமங்கை விருது
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 05:05.18 AM GMT +05:30 ]
டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு அமெரிக்கா வீரமங்கை விருது வழங்க உள்ளது.

சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ம் திகதி இந்த விருதை, அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி ஆகியோர் வழங்க உள்ளனர்.

உயிரிழந்த மாணவி, தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள தைரியமாக போராடியதாகவும், காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் குற்றவாளிகள் ஆறு பேருக்கும் உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியதையும் அமெரிக்கா பாராட்டியுள்ளது.

மேலும், நீதி கேட்டும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராகவும், மாணவியின் குடும்பத்தினர் நடத்தி வரும் தொடர் போராட்டத்தையும் அமெரிக்க அரசு வெகுவாகப் புகழ்ந்துள்ளது.

மாணவியின் உயிரிழப்பு, இந்தியா மட்டும் அல்லாமல் பல்வேறு நாடுகளில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் விருது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து பெண்களின் முன்னேற்றத்திற்காக தைரியமாக போராடிய பெண்களுக்கு அமெரிக்க அரசு வீரமங்கை விருதினை வழங்கி வருகிறது.

கடந்த 2007ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது இதுவரை 45 நாடுகளைச் சேர்ந்த 67 பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10 பெண்கள் இந்த விருதினை பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு : சீன பிரதமர்

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்..!

கால் இல்லாத நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த வீராங்கனை

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.300 உயர்ந்தது

டெல்லி மாணவி பலாத்கார வழக்கு: குற்றவாளிகளிடம் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி மறுப்பு

காதல் திருமணம் செய்த தங்கையை கொன்றது ஏன்? அண்ணன் பரபரப்பு வாக்குமூலம்

கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையில் ஜெயலலிதா

தமிழ்நாட்டில் 2000 போலி மருத்துவர்கள்: அதிர்ச்சி தகவல்

காதலித்து ஏமாற்றியதாக காதலனை உதைத்து பொலிஸில் ஒப்படைத்த பெண்..!

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் ஆயுள் தண்டனை கைதியான 80 வயதானவர் கோர்ட்டில் சரண்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மார்பக புற்று நோயை அறிந்து கொள்ளும் அதிநவீன கருவி அறிமுகம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 08:13.34 AM ]
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை துல்லியமாக கண்டுபிடிக்கும் அதிநவீன "அமுலெட்" கருவி இந்தியாவிலேயே முதன் முதலாக டெல்லியில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. [மேலும்]
ஸ்ரீசாந்தை சூதாட்டத்தில் சிக்க வைத்த டிராவிட்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:51.24 AM ]
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 பேர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. [மேலும்]
டாக்டருடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால் மனைவி வெட்டிக் கொலை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:45.35 AM ]
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 40), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (34). [மேலும்]
ஸ்ரீசாந்துடன் ஹோட்டலில் தங்கியிருந்த மராத்திய நடிகை யார்?
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:56.35 AM ]
ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்ட போது, அவருடன் இருந்த மராத்திய நடிகையிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். [மேலும்]
காதலனை கரம்பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:45.19 AM ]
காதல் திருமணம் செய்த சென்னை பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]