கடந்த 25ம் திகதி தொடங்கிய காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், கோபால் ராய், மணிஷ் சிசோடியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஹசாரே 29ம் திகதி முதல் உண்ணா விரதம் இருக்கத் தொடங்கினார். இந்நிலையில் உடல் நலம் சோர்வு ஏற்பட்டு விட்டதாலும் இதற்கிடையே மத்திய அரசு தமது கோரிக்கைகளை கண்டுகொள்ளாததாலும் ஹசாரே குழுவினர் போராட்டத்தை கை கழுவ முடிவு செய்துள்ளனர்.
இதன்பின்னர், அரசியலில் களமிறங்கப்போவதாகவும் ஹசாரே குழு முடிவு செய்துள்ளது. இதற்காக டுவிட்டர் தளத்தில் மாற்று அரசியலை முன்னெடுப்பது பற்றி மக்களிடம் கருத்து கேட்டு வருகின்றனர்.
“நாட்டின் மாற்று அரசியல் சக்தியாக அன்னாஜி களமிறங்க வேண்டிய நேரம் இதுதானா?” என்று அன்னா குழு சார்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. மற்றொரு இணையதள பக்கத்தில் “தற்போதைய அரசியல் கட்சிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?”
“நாட்டின் மாற்று அரசியல் சக்தியை அன்னாஜி முன்னெடுக்க வேண்டுமா?” என அக்குழு மக்களிடம் கேள்விகள் மூலம் கருத்து கேட்டிருக்கிறது.
இதில் மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை பொறுத்தே அன்னா குழு அரசியலில் குதிக்க களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. |