இந்தியச் செய்தி
ஐ.பி.எல் போட்டி சூதாட்டத்தால் சிறுவன் படுகொலை
[ சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012, 08:53.48 AM GMT +05:30 ]
ஆந்திராவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க பள்ளி மாணவர் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அமலாபுரம் புல்பேட்டி குரு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரா (வயது 19) பொறியியல் கல்லூரி மாணவர் ஆவான்.

தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள கிரிக்கெட் சூதாட்ட கும்பலிடம் 'பெட்' கட்டி ரூ.5 லட்சம் வரை கடன்பட்டான்.

இந்த கடனை அடைப்பதற்காக பக்கத்து வீட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீனிவாசராவின் மகன் நாகவிவேகை(வயது 12) கடத்தினான்.

ரவிச்சந்திராவுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நாகவிவேக்கிற்கு சிறிது தூரம் சென்றதும் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தன்னை விட்டு விடுமாறு கூச்சலிட்ட சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்தான்.

பின்னர் பிணத்தை அங்கு உள்ள ஏரியில் வீசி விட்டு ரகசிய இடத்தில் பதுங்கி, விவேக்கின் தந்தை ஸ்ரீனிவாசராவுக்கு போன் செய்து ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளான்.

இதனால் பதறிப்போன ஸ்ரீனிவாச ராவ் பொலிஸில் புகார் செய்தார். பின்னர் பொலிஸார் அறிவுரைப்படி ரவிச்சந்திரா கூறிய இடத்திற்கு பணத்துடன் சென்றார்.

அங்கு நண்பர்களுடன் நின்று கொண்டிருந்த ரவிச்சந்திரா பொலிஸை கண்டதும் நண்பரின் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி விட்டான்.

இருப்பினும் அவனை பொலிஸார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில் சிறுவனை கொலை செய்து விட்டராக ரவிச்சந்திரா தெரிவித்தான்.

இதைக்கேட்டு சிறுவனின் பெற்றோர்கள் கதறி அழுதனர். ஆவேசம் அடைந்த பொதுமக்கள் பொலிஸை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள்.

ரவிச்சந்திரா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

கிரிக்கெட் சூதாட்ட கடனை அடைக்க கல்லூரி மாணவர் ஒருவர் சிறுவனை கடத்தி கொலை செய்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

டெல்லி மாணவி பலாத்கார வழக்கு: குற்றவாளிகளிடம் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி மறுப்பு

காதல் திருமணம் செய்த தங்கையை கொன்றது ஏன்? அண்ணன் பரபரப்பு வாக்குமூலம்

கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையில் ஜெயலலிதா

தமிழ்நாட்டில் 2000 போலி மருத்துவர்கள்: அதிர்ச்சி தகவல்

காதலித்து ஏமாற்றியதாக காதலனை உதைத்து பொலிஸில் ஒப்படைத்த பெண்..!

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் ஆயுள் தண்டனை கைதியான 80 வயதானவர் கோர்ட்டில் சரண்

காஷ்மீரில் தொடர் நிலநடுக்கம்: இதுவரை 80000 குடும்பங்கள் பாதிப்பு

மானக்கேடான குற்றம் கற்பழிப்பு: உச்ச நீதிமன்றம் கருத்து

இன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிப்பு

சிங்கப்பூரில் விபசாரம்: சென்னை இளைஞருக்கு சிறைத்தண்டனை

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
டாக்டருடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால் மனைவி வெட்டிக் கொலை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:45.35 AM ]
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 40), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (34). [மேலும்]
ஸ்ரீசாந்துடன் ஹோட்டலில் தங்கியிருந்த மராத்திய நடிகை யார்?
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:56.35 AM ]
ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்ட போது, அவருடன் இருந்த மராத்திய நடிகையிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். [மேலும்]
காதலனை கரம்பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:45.19 AM ]
காதல் திருமணம் செய்த சென்னை பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
தலித் சிறுமி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட கொடூரம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:23.59 AM ]
மத்திய பிரதேசத்தில் தலித் சிறுமி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
11 மாத குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி கோரி பெற்றோர் மனு..!
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:11.17 PM ]
பத்து மாதம் சுமந்து பெற்ற, 11 மாத குழந்தையை, கருணை கொலை செய்ய அனுமதி கோரி, கலெக்டரிடம், பெற்றோர் மனு கொடுத்துள்ளனர். [மேலும்]