இந்தியச் செய்தி
மத்திய அமைச்சரவையில் பெரிய மாற்றம்: ராகுலுக்கு புதிய பொறுப்பு கிடைக்குமா?
[ சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012, 02:00.06 PM GMT +05:30 ]
நாட்டில் ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு, அந்நிய நேரடி முதலீடு அனுமதி உள்ளிட்ட விவகாரங்களினால் திணறி வரும் காங்கிரஸ் தலைமையிலான அரசில் பெரிய மாற்றம் வருகிறது.

காங்கிரஸ் தலைமையிலான அரசு தனது அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை நடக்கும் கூட்டத்தில் இதற்கான மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது.

இதன்படி தமிழகத்தை சேர்ந்த ஜி.கே.வாசனிடம் இருந்து கப்பல் போக்குவரத்து பறிக்கப்படும். தி.மு.கவை சேர்ந்த ரகுமான்கானுக்கு சிறுபான்மை துறை வழங்கபடும்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அமைச்சர் பொறுப்பும், மற்றும் மகாராஷட்டிர முதல்வர் ப்ரித்விராஜ் சவான், ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, ஜோதிஆதித்யா சிந்தியா, சச்சின் பைலட், மனீஷ் திவாரி ஆகியோருக்கும் மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்றும் டெல்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

அதே நேரத்தில் மூத்த அமைச்சர்களாக அந்தோணி, சுஷீல்குமார்ஷிண்டே, எஸ். எம்.கிருஷ்ணா, ப.சிதம்பரம் ஆகியோர் பொறுப்பில் மாற்றம் இல்லை.

இதற்கிடையில் சமீப நாட்களாக மத்திய அமைச்சரவையில் ராகுல் காந்தியின் பேச்சு அதிகமாகவே காணப்படுகிறது.

பிரதமர் மன்மோகன் சிங், உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் போன்றோர் ராகுலுக்கு மத்திய அமைச்சரவையில் பொறுப்பு வழங்கவேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முக்கிய பதவிகளில் இருக்கும் வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித், குலாம்நபி ஆசாத், வயலார் ரவி, ஜெய்பால் ரெட்டி, சுபத்காத் சகாய், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், அகந்தா சங்மா, பெனி பிரசாத் வர்மா, ஜி.கே.வாசன் ஆகியோரிடம் இருந்து கூடுதல் பொறுப்புககள் பறிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கணவனுடன் வெப்-கேமராவில் சண்டையிட்ட மனைவி தற்கொலை..!

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் வரிசையில் சோனியா காந்தி 9-வது இடம்

செம்மொழி அந்தஸ்து பெற்றது மலையாள மொழி : மத்திய அமைச்சரவை தீர்மானம்

தாலி கட்டும் தருணதில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

கள்ளக் காதலை கணவன் கண்டித்ததால் மனைவி ஆசிட் குடித்து தற்கொலை

பாகிஸ்தான் நோயாளிக்கு இதயம் கொடுத்து காப்பாற்றிய இந்தியா

சுகாதாரத் துறையில் இணைந்து செயல்பட இந்தியா-சீனா முடிவு

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக 9 தரகர்கள் கைது

கணவர் கொலை வழக்கில் சாட்சி சொன்ன மனைவி கழுத்தறுத்து படுகொலை

மனைவி மீது சந்தேகப்பட்டு 3 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
காந்தி தாத்தா ரத்தம் ஏலமா? என் ரத்தம் கொதிக்கிறது: கொள்ளுப்பேரன் வேதனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:39.26 AM ]
மகாத்மா காந்தியின் ரத்தம் தோய்ந்த பொருட்கள் ஏலம் விடப்படுவதை தடுக்க முடியவில்லையே என அவரது கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். [மேலும்]
இந்தியாவிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தில் பாகிஸ்தான்
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:35.31 AM ]
கடும் மின் தட்டுப்பாடால் அவதிப்பட்டு வரும் பாகிஸ்தான், இந்தியாவிடமிருந்து 1000 மெகா வாட் மின்சாரம் வாங்கும் திட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. [மேலும்]
சூதாட்ட தலைவன் பிரசாந்துக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:59.14 AM ]
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் சிக்கினர். [மேலும்]
எந்த தப்பும் செய்யவில்லை-நான் நிரபராதி: ஸ்ரீசாந்த்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:24.26 AM ]
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் உட்பட 18 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
7 வயது சிறுமியை கற்பழித்து கொடூரமாக கொன்ற உடன்பிறவா அண்ணன்
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:16.51 AM ]
மத்திய பிரதேசத்தில் 7வது சிறுமியை அவரது உடன்பிறவா அண்ணன் கடத்திச் சென்று, கற்பழித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]