இந்தியச் செய்தி
சிறைக்கைதியின் உலக சாதனை
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 05:40.03 AM GMT +05:30 ]
அகமதாபாத்தில் சிறையிலிருந்தபடியே அஞ்சல்வழி கல்வி மூலம் 31 பட்டங்கள் படித்து முடித்த மருத்துவர் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் பானு பட்டேல். எம்பிபிஎஸ் படித்துள்ள இவர் கடந்த 2004ம் ஆண்டு பெரா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2005ம் ஆண்டு இவருக்கு அகமதாபாத் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இதை தொடர்ந்து அவர் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவருக்கு படித்தவர் என்பதால் சிறையில் உள்ள கிளினிக்கில் இவர் வேலையில் அமர்த்தப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து சிறை லைப்ரரி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த கால கட்டத்தில் மருத்துவர் பாலாசாகிப் அம்பேத்கர் திறந்த வெளிபல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி பட்டப்படிப்பில் சேர்ந்தார்.

கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்த காலகட்டத்தில் எம்எஸ்சி, பிகாம், எம்காம் மற்றும் பட்டமேற்படிப்பு டிப்ளமோ என 31 பட்டங்களை வாங்கிக் குவித்தார்.

சிறையிலிருந்து விடுதலை ஆன பின்பு இவரது சாதனையை பாராட்டி அம்பேத்கர் பல்கலைக்கழகம் இவருக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கி கவுரவித்தது.

தற்போது இவர் மாநில சிறைகளில் உள்ள 26 தொலைதூர கல்வி மையங்களில் கைதிகளுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

சிறையிலிருந்தபடியே 31 பட்டங்களை பெற்ற இவரது சாதனை உலக சாதனை புத்தகம் மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இதற்கான சான்றுகள் நேற்று அவருக்கு அளிக்கப்பட்டது. லிம்கா சாதனை புத்தகத்தின் 2013ம் ஆண்டுக்கான வெளியீட்டில் இவரது சாதனை இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை நாடகம் புரிந்த நபர் கைது..!

எதிர்க்கட்சியே பாராளுமன்ற முடக்கத்திற்கு காரணம் : சோனியா காந்தி குற்றச்சாட்டு

உலகின் அதிவேக ஏவுகணை சோதனை வெற்றி

அரசியலில் குதிக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா

காந்தி தாத்தா ரத்தம் ஏலமா? என் ரத்தம் கொதிக்கிறது: கொள்ளுப்பேரன் வேதனை

இந்தியாவிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தில் பாகிஸ்தான்

சூதாட்ட தலைவன் பிரசாந்துக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு

அடுத்த பிரதமர் நரேந்திர மோடி: 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் கருத்து கணிப்பு

நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் ஐவர் சுட்டுக்கொலை

எந்த தப்பும் செய்யவில்லை-நான் நிரபராதி: ஸ்ரீசாந்த்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
காதல் திருமணம் செய்த தங்கையை கொன்றது ஏன்? அண்ணன் பரபரப்பு வாக்குமூலம்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:26.03 AM ]
காதல் திருமணம் செய்து கொண்ட தங்கையை கொன்றது ஏன் என பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார் அப்பெண்ணின் அண்ணன். [மேலும்]
தமிழ்நாட்டில் 2000 போலி மருத்துவர்கள்: அதிர்ச்சி தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 05:13.45 AM ]
தமிழ்நாட்டில் இரண்டாயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது இந்திய மருத்துவர்கள் சங்கம். [மேலும்]
இன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:53.47 AM ]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினமான இன்று தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. [மேலும்]
3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:13.35 AM ]
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா அம்மயப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இஸ்மாயில், லாரி டிரைவர். [மேலும்]
மார்பக புற்று நோயை அறிந்து கொள்ளும் அதிநவீன கருவி அறிமுகம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 08:13.34 AM ]
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை துல்லியமாக கண்டுபிடிக்கும் அதிநவீன "அமுலெட்" கருவி இந்தியாவிலேயே முதன் முதலாக டெல்லியில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. [மேலும்]