இதற்கு ஆதரவு தெரிவித்து கூடங்குளம் அணுமின்நிலைய போராட்டக்குழு சார்பில் இடிந்தகரையில் இன்று உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட இடிந்தகரை, கூத்தங்குளி, உவரி, பெருமணல் போன்ற மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி இன்று அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
உண்ணாவிரதத்தின் போது உதயகுமார் நிருபர்களிடம் கூறுகையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடவேண்டும், பாராளுமன்றம், சட்டமன்றத்தில் மீனவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும், மத்திய அமைச்சரவையில் மீனவர்களுக்கு என்று தனி அமைச்சகம் வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய மீனவர் பேரவை அமைப்பு சார்பில் இந்தியா முழுவதும் கடற்கரை கிராமங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதற்கு ஆதரவு தெரிவித்து இடிந்தகரையில் நாங்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் இன்று ஊர் கூட்டமும் நடக்கிறது. இதில் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக தெரிவித்துார். |