தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளிப்பட்டி 1வது வார்டு காலனி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சசிக்குமார்- முருகேஸ்வரி தம்பதியின் மகள் ரோசினி (3) படித்து வருகின்றாள்.
இச்சிறுமி கடந்த சில நாட்களாகவே மையத்திற்கு வந்தால் சேட்டை செய்து, அழுது கொண்டே இருப்பாள் என கூறப்படுகிறது.
சிறுமி ரோசினியின் சேட்டையை பொறுத்துக்கொள்ள முடியாத அம்மையத்தின் அமைப்பாளர் பாரதி மற்றும் உதவியாளர் ஜெயா ஆகிய இருவரும் கொள்ளிக்கட்டையை எடுத்து கொஞ்சம் கூட ஈவு, இரக்கமின்றி சிறுமியின் கை, கால்களில் சூடு வைத்திருக்கின்றார்கள்.
சிறுமியின் கை, கால்களில் சூடு வைத்த அடையாளத்தைப் பார்த்த தாய் முருகேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மைய உதவியாளர் ஜெயா, சிறுமி கீழே விழுந்து விட்டதாகத் தெரிவித்தார்.
ஆனால் சிறுமி ரோசினி, சூடு வைத்த சம்பவத்தை அழுகையுடன் தெரிவித்திருக்கின்றார். இது குறித்து ரோசினியின் பெற்றோர் பொலிஸில் புகார் அளித்ததன் பேரில் விசாரணை நடைபெற்றது.
இவ் விசாரணையில் ஜெயாவும், பாரதியும் சேர்ந்து சிறுமிக்கு சூடு வைத்தது தெரிய வந்ததையடுத்து அதிகாரிகள் அந்த 2 பேரையும் பணி நீக்கம் செய்தனர். |