தமிழ்நாட்டுச் செய்தி
3 வயது சிறுமிக்கு கொள்ளிக்கட்டையால் சூடு போட்ட அங்கான்வாடி ஊழியர்கள்
[ புதன்கிழமை, 11 யூலை 2012, 08:45.04 AM GMT +05:30 ]
தமிழ்நாடு, கம்பம் அருகே அங்கன்வாடியில் 3 வயது சிறுமிக்கு ஊழியர்கள் கொள்ளிக்கட்டையால் சூடு போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளிப்பட்டி 1வது வார்டு காலனி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சசிக்குமார்- முருகேஸ்வரி தம்பதியின் மகள் ரோசினி (3) படித்து வருகின்றாள்.

இச்சிறுமி கடந்த சில நாட்களாகவே மையத்திற்கு வந்தால் சேட்டை செய்து, அழுது கொண்டே இருப்பாள் என கூறப்படுகிறது.

சிறுமி ரோசினியின் சேட்டையை பொறுத்துக்கொள்ள முடியாத அம்மையத்தின் அமைப்பாளர் பாரதி மற்றும் உதவியாளர் ஜெயா ஆகிய இருவரும் கொள்ளிக்கட்டையை எடுத்து கொஞ்சம் கூட ஈவு, இரக்கமின்றி சிறுமியின் கை, கால்களில் சூடு வைத்திருக்கின்றார்கள்.

சிறுமியின் கை, கால்களில் சூடு வைத்த அடையாளத்தைப் பார்த்த தாய் முருகேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மைய உதவியாளர் ஜெயா, சிறுமி கீழே விழுந்து விட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால் சிறுமி ரோசினி, சூடு வைத்த சம்பவத்தை அழுகையுடன் தெரிவித்திருக்கின்றார். இது குறித்து ரோசினியின் பெற்றோர் பொலிஸில் புகார் அளித்ததன் பேரில் விசாரணை நடைபெற்றது.

இவ் விசாரணையில் ஜெயாவும், பாரதியும் சேர்ந்து சிறுமிக்கு சூடு வைத்தது தெரிய வந்ததையடுத்து அதிகாரிகள் அந்த 2 பேரையும் பணி நீக்கம் செய்தனர்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ சிங்?
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 08:25.55 AM ]
ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள விண்டூ சிங் மொடல் அழகிகளை தரகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் சப்ளை செய்துள்ளது தெரியவந்துள்ளது. [மேலும்]
நடுவானில் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து: பயணிகளின் திக் திக் நிமிடங்கள்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:31.17 AM ]
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. [மேலும்]
வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க நீதிபதியாக இந்தியர் நியமனம்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:08.15 AM ]
வரலாற்றிலேயே முதன் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீகாந்த் சீனிவாசன் என்பவர், அமெரிக்க நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
என் அம்மா போல் நான் கிடையாது: ராகுல் காந்தி எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:28.46 AM ]
என் அம்மா போன்று நான் கிடையாது, கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். [மேலும்]
மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:03.07 AM ]
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நான்கு பேர் படுகொலை வழக்கில், நான்கு தமிழர்களுக்கு மலேசிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. [மேலும்]