அசாமில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இராணுவ வீரருக்கு அடி, உதை (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2012, 07:11.11 AM GMT +05:30 ]
அசாமில் இராணுவ வீரர் ஒருவர், விறகு சுமந்து கொண்டு சென்ற இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாமின் சிப்சாகர் மாவட்டத்தில், நெட்டை புஹூரி வனப்பகுதியில் விறகு சுமந்து கொண்டு பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பயிற்சிக்காக அங்கு சீருடையில் இருந்த இராணுவ வீரர் ஒருவர், அப்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அந்நேரத்தில் அப்பெண் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றினர். பின்னர் அந்த இராணுவ வீரரை பிடித்து விசாரித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, கவுகாத்தியில் இளம் பெண் ஒருவரை 20-க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து கொண்டு மானபங்கம் செய்தது இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் மீண்டும் அசாமில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மணீஸ் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தின் 3-வது தளத்தில் இருந்து இன்று காலை கதறல் சத்தத்துடன் புகையும் வருவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். [மேலும்]