இலங்கையில் யாழ்ப்பாணம், வல்வெட்டித் துறை, பருத்தித்துறை பகுதிகளைச் சேர்ந்த 65 பேர் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடையும் நோக்கில் புறப்பட்டனர்.
கடந்த மாதம் 24ம் திகதி விசைப் படகில் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட இவர்கள், நபர் ஒருவருக்கு ரூ.3 லட்சம் புரோக்கரிடம் கொடுத்ததாக தெரிகிறது.
2 நாள் பயணத்திற்கு பிறகு விசைப்படகு நாகைக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் பழுதானதாக கூறப்படுகிறது.
கடலுக்குள் தத்தளித்த இவர்களை, நாகப்பட்டிணம் மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
இவர்களிடம் நாகை பொலிஸாரும், கடலோர காவல் படையினரும் விசாரணை நடத்திய பின்னர், அனைவரும் நாகையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். |