தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இந்த சிறுவனை இரவு நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் மீட்டுள்ளார்.
அவனிடம் விசாரித்த போது, தனது தந்தை ஆடு, மாடு மேய்க்கும் உரிமையாளரிடம் விற்று விட்டதாகவும் இன்றைய பொழுதில் நான் மேய்த்த மாட்டு மந்தைகளில் தவறி விட்ட ஒன்றை தேடி வந்தேன்.
இரவு நேரம் வந்தமையால் பயம் தாங்கமுடியாமல் அலறினேன் என்று கூறியுள்ளான்.
உடனே சிறுவன் தெரிவித்த முகவரியின் கீழ், அவனது தந்தை அய்யாசாமிக்கு தகவல் சென்றது.
ஆனால் அவருடன் செல்ல சிறுவன் ராம்குமார் மறுத்து விட்டான். இதன் காரணமாக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான்.
இதில் சிறுவனை ரூ.20000 குத்தகைக்கு விற்றுள்ளது தெரிய வந்தது. மேலும் சிறுவனை குத்தகைக்கு வாங்கிய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். |