அவருக்கு சிகிச்சை அளித்த டொக்டர் ஜார்ஜ் சோனியா மகாம் பிரேயிடம் வந்து சிகிச்சை பலனின்றி உன் அம்மா இறந்து விட்டார் என்று கூறினார்.
இந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத சோனியா எதிர்பாராதவிதமாக டொக்டரின் கன்னத்தில் அறைந்தார்.
இதில் டொக்டர் முகத்தில் லேசான ரத்தக்காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸில் புகார் செய்தார் டொக்டர் ஜார்ஜ் சோனியா.
இப்புகாரின் பேரில் அந்த பெண் மீது பானாஜி நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணை நேற்று முடிவுக்கு வந்தது.
நேற்றைய விசாரணையின் போது நீதிபதி, கடமையில் இருந்த போது அரசு ஊழியரை தாக்கி காயப்படுத்திய குற்றப்பிரிவின் கீழ் சோனியாவிற்கு ரூ. 200 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். |