ஆடலூரில் உள்ள மத்திய வங்கியில் அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பஞ்சாயத்து கணக்குகள் உள்ளன.
இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் வங்கியின் இரும்பு மற்றும் மரக்கதவுகளை உடைத்து கொள்ளையர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட முயன்றனர்.
லாக்கரை உடைக்கும் போது, வங்கியின் அலாரம் ஒலித்ததில் “அலறல்” சத்தம் கேட்டு பொதுமக்கள் வங்கியின் முன்பு திரண்டனர்.
அலாரம் ஒலித்த சற்று நிமிடத்தில் வெள்ளை நிற அம்பாசிடர் காரில் கொள்ளையர்கள் தப்பி சென்றதை பொதுமக்கள் பார்த்ததாக திண்டுக்கல் மாவட்ட பொலிஸ் எஸ்.பி. ஜெயசந்திரனிடம் புகார் கொடுத்தனர்.
தற்போது ஜெயசந்திரன் தலைமையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கி கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. |