இந்தியச் செய்தி
பொது இடங்களில் தலைவர்களுக்கு சிலை வைக்கத் தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 03:53.10 AM GMT +05:30 ]
பொது இடங்கள் மற்றும் வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக தலைவர்களின் சிலைகள் வைக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வீதிகளின் நடுவில் சிலைகளை வைக்க மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் அனுமதி அளிக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட இடத்தில் ஒரு தலைவரின் சிலையை வைக்க மாநில அரசு அனுமதி அளித்தது. போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் எனக் கூறி இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எஸ்.ஜே. முகோபாத்யா ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில்,

‘‘தேசிய நெடுஞ்சாலையில் சிலை வைக்க கேரள அரசு வழங்கிய அனுமதிக்கு உயர்நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதிக்கிறது. நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை இப்போதுள்ள நிலையே ந¦டிக்க வேண்டும். இனி, போக்குவரத்துக்கு இடையூறாக பொது இடங்கள், சாலைகள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் இடங்களில் சிலை வைக்கவோ, கட்டிடங்கள் கட்டுவதற்கோ கேரள அரசு அனுமதி அளிக்க கூடாது.

எனினும், போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்தும் தெரு விளக்குகள் போன்றவற்றை அமைக்க அனுமதி அளிக்கலாம். இந்த உத்தரவு கேரளாவுக்கு மட்டுமின்றி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும்’’ என கூறியுள்ளனர்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

பேச்சுத்திறனற்ற மாணவிகளுக்கு பாலியல் சித்திரவதை : பள்ளி நிர்வாகி கைது..!

போலீசார் சித்ரவதைக்கு கைதி பலி : 4 போலீசார் சஸ்பெண்ட்

பிரதமரை மாற்றுவது பற்றி யாரும் நினைக்க வேண்டாம் : காங்கிரஸ் திட்டவட்டம்

மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை

சூதாட்டத்திற்காக ஸ்ரீசாந்த் பிளாக்மெயில் செய்யப்பட்டாரா..!

ஐ.பி.எல்.சூதாட்ட தரகர்களின் தலைவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

மேட்டுப்பாளையம் கார் விபத்தில் மூவர் பலி..!

தண்டையார் பேட்டையில் வாலிபர் வெட்டிப் படுகொலை

கர்நாடகாவில் நடிகர் அம்பரீஷ், நடிகை உமாஸ்ரீ உட்பட 28 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு! 20 லிட்டர் தண்ணீர் ரூ.200: மக்கள் அவதி

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இறந்து போன மனைவிக்காக குட்டி தாஜ்மஹாலை கட்டிய கணவர்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:48.19 AM ]
உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் தனது மனைவியின் நினைவில் தாஜ்மகாலைப் போன்றே ஒரு குட்டி தாஜ்மகாலை கட்டியுள்ளார். [மேலும்]
அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவி கற்பழித்துக் கொலை: இளைஞருக்கு 45 வருடம் சிறை
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:29.01 AM ]
அவுஸ்திரேலியாவில் இந்தியாவை சேர்ந்த 24 வயதுடைய மாணவியொருவர் கற்பழிக்கபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 45 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்தின் புலம்பல்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:02.35 AM ]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீரர் ஸ்ரீசாந்த். சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது இவரது வாடிக்கையாகும். [மேலும்]
சீனாவை கண்காணிக்க புதிய விமானப்படை தளத்தை அமைக்கிறது இந்தியா
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 04:38.01 AM ]
இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. [மேலும்]
மதுரையில் குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 03:52.18 AM ]
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதிக்கருகில் உள்ள குப்பைத் தொட்டியில் குண்டு வெடித்ததில் மூன்று பேர் படுகாயமடைந்ததுடன், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]