தமிழ்நாட்டுச் செய்தி
மீண்டும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் வெளியேற்றம்
[ சனிக்கிழமை, 18 ஓகஸ்ட் 2012, 03:51.19 AM GMT +05:30 ]
அசாம் கலவரத்தைத்தொடர்ந்து ஏற்பட்ட பீதியால் வடகிழக்கு மாநிலத்தவர்கள் பெங்களூரு, சென்னையிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

நாட்டில் உள்ள எந்த மாநிலங்களில் வாழும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் உட்பட மத்திய அமைச்சரவை உறுதிபட தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் மூன்றாவது நாளாக பெங்களூர் மற்றும் சென்னையிலுள்ள வடகிழக்கு மாநிலத்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர்.

பெங்களூரிலிருந்து இயக்கப்பட்ட 2 கவுகாத்தி சிறப்பு இரயில்கள் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று புறப்பட்டனர்.

ஒரே நாளில் அதிகமான நபர்கள் புறப்பட்டதால் இரயில்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இரயில்களில் போதுமான இடம் இல்லாததால் படிக்கட்டுகளிலும் கழிவறைகளிலும் அமர்ந்தபடி அவர்கள் பயணத்தை தொடங்கினார்கள்.

அசாம் மாநில கலவரத்தை தொடர்ந்து பெங்களூருவில் வடகிழக்கு மாநிலத்தவர் தாக்கப்படுவதாக தகவல் வெளியானதால் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு உள்ளது என மாநில முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தும் அவர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி சென்றனர்.

15 ஆயிரம் பேர் வெளியேற்றம்

பெங்களூர், மைசூர், மங்களூர் மற்றும் குடகு உள்ளிட்ட நகரங்களிலிருந்து தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் இரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் வெளியேறினர்.

கடந்த 2 நாள்களில் மட்டும் 15 ஆயிரம் பேர் வெளியேறியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 9,718 டிக்கெட் விற்பனையாகி உள்ளதாகவும், 2 சிறப்பு ரயில்கள் கவுகாத்திக்கு புறப்பட்டுச் சென்றதாகவும் மங்களூர் இரயில்வே மண்டல அதிகாரி அனில் குமார் அகர்வால் தெரிவித்தார்.

எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். அனுப்ப தடை

இந்நிலையில், இது தொடர்பான வதந்தி மேற்கொண்டு பரவுவதைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் அடுத்த 15 நாள்களுக்கு தொகுப்பு எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன்படி, ஒவ்வொருவரும் ஒரே தடவையில் 5 எம்.எம்.எஸ்க்கு மேல் அனுப்ப முடியாது.

இது குறித்து, வடகிழக்கு மாநில உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பினர். அப்போது பேசிய பிரதமர் மன்மோகன் சிங், வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

"உலக குடிமகன் விருது" பெற்ற வீரப்ப மொய்லி

எந்நேரமும் ராணுவம் போருக்கு தயாராக இருக்க வேண்டும்: மன்மோகன் சிங் கருத்து

பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்தததால் ஒருநாள் கவுரவ மேயர் பதவி கிடைத்த மாணவி

ஆந்திராவில் வெயில் கொடுமைக்கு 57-பேர் பலி

திருமண பந்தலில் லாரி புகுந்ததில் மணமகள் உள்பட நால்வர் பலி

வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ சிங்?

எங்களின் முக்கியமான நட்பு நாடு இந்தியா: ரஷ்ய தூதர்

நடுவானில் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து: பயணிகளின் திக் திக் நிமிடங்கள்

இராணுவத்தினருக்கும்- பயங்கரவாதிகளுக்கும் சண்டை: மூன்று பேர் பலி

பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட எஸ்.ஐ

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கணவர் கொலை வழக்கில் சாட்சி சொன்ன மனைவி கழுத்தறுத்து படுகொலை
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:53.34 AM ]
கரூர் அருகே உள்ள வெங்கமேடு வி.வி.ஜி. நகர் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 60). அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் வெட்டியானாக வேலை பார்த்து வந்தார். [மேலும்]
பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 02:28.22 AM ] []
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இரு பொலிசார்கள் திடீரென மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. [மேலும்]
சுபாஷ் சந்திர போஸின் அஸ்தி எங்கே? உடனடியாக பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:44.57 AM ]
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்]
பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்து பார்வையற்ற மாணவி சாதனை
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:35.33 AM ]
மத்திய பிரதேசத்தில் பிளஸ் 2 தேர்வில் கண் பார்வையற்ற மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். [மேலும்]
காந்தி தாத்தா ரத்தம் ஏலமா? என் ரத்தம் கொதிக்கிறது: கொள்ளுப்பேரன் வேதனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:39.26 AM ]
மகாத்மா காந்தியின் ரத்தம் தோய்ந்த பொருட்கள் ஏலம் விடப்படுவதை தடுக்க முடியவில்லையே என அவரது கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். [மேலும்]