இதுகுறித்து இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது; சிறிய ரக துப்பாக்கிகளை வைத்து இன்று மதியம் 2 மணியளவில் பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய இராணுவத்தினரும் திருப்பிச் சுட்டதில் வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.
அவர் உதம்பூரில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
கடந்த இரண்டு நாட்களில் இந்திய எல்லைப் பகுதிகளை நோக்கி இரண்டாவது முறையாக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இந்தாண்டில் பாகிஸ்தான் எல்லை மீறுவது இது 12-வது முறையாகும் என்று அவர் கூறினார். |