இதில் முறைகேடு நடந்ததாக இவர் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவர் மீதான வழக்கு ஐதராபாத்தில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கை முதன்மை கூடுதல் சிறப்பு நீதிபதி டி. பட்டாபிராம ராவ் விசாரித்து வந்தார்.
ஜனார்த்தன் ரெட்டி பிணை வழங்கக்கோரி, சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு பிணை வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் எனக் கூறி அதற்கு சி.பி.ஐ எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் அவருக்கு மே 11ஆம் திகதி, சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியது. இதில் ரெட்டியை பிணையில் விடுவிக்க ரூ.1.80 கோடியை நீதிபதி பட்டாபிராமராவ் லஞ்சம் பெற்றார் என சி.பி.ஐ கண்டறிந்தது.
ஐதராபாத்தில் உள்ள வங்கி லாக்கரில் கணக்கில் வராத ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் இருந்ததை சி.பி.ஐ கண்டுபிடித்து கைப்பற்றியது.
அந்த லாக்கரின் சாவி, நீதிபதி பட்டாபிராமராவின் மகனிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இதையடுத்து நீதிபதி பட்டாபிராமராவ் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கு தொடர்பாக இம்மாத தொடக்கத்தில் இரண்டு நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவரான லட்சுமி நரசிம்மராவிடம் சி.பி.ஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஜனார்த்தன் ரெட்டி பிணையில் வெளிவர அவரது குடும்பத்தினர் தனக்கு ரூ.100 கோடி வரை தர முன்வந்ததாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக முன்னாள் அமைச்சர் ஒருவர் பிணையில் வெளிவர ரூ.100 கோடி வரை லஞ்சம் தர முன்வந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |