இப்படத்தில் துப்பரவுத்தொழிலாளியான கே.ஆர்.விஜயா தன்னுடைய அயராத உழைப்பால் அப்பகுதி மேயர் ஆவார் என்பதே திரைக்கதையாகும்.
இந்நிலையில் மேயர் மீனாட்சி திரைக்கதை டெல்லி துப்பரவுத் தொழிலாளியின் வாழ்வில் உண்மையாகியுள்ளது.
தெற்கு டெல்லியில் கீடா வார்டில் 14 ஆண்டுகளாக கையில் பெரிய துடைப்பத்துடன் வந்து தெருக்களை சுத்தம் செய்பவர் ராஜ்குமாரி.
ஆனால், அவரது வாழ்வு, அடுத்த வாரம் முதல் மாறப் போகிறது. அது மட்டுமின்றி, தெருக்கள் தூய்மையாக இல்லை என்றால் இவரை மக்கள் கேட்பார்கள்.
இவரும் மற்ற பணியாளர்களை கேள்வி கேட்பார். ஏனெனில் கீடா வார்டு புதிய கவுன்சிலர் ராஜ்குமாரி தான். டெல்லி மாநகராட்சி தேர்தலில் 50 சதவீத வார்டுகள், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் பல பெண்கள், அரசியலில் காலடி எடுத்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் ராஜ்குமாரியை கீடா வார்டில் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி நிறுத்தியது.
இவர், 4,468 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். இப்போது, கவுன்சிலராக பொறுப்பேற்க உள்ளார்.
இது பற்றி ராஜ்குமாரி கூறுகையில், துப்புரவு பணியை எப்போது சிறப்பாக செய்வேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னை கவுன்சிலராக்கியுள்ள மக்களை ஒரு போதும் ஏமாற்ற மாட்டேன். மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.

|